புதன், 26 மார்ச், 2014

குழந்தை வயிற்று கிருமியை அழிக்கும் திப்பிலி

திப்பிலியையும், திப்பிலி மூலத்தையும் நன்கு பொடி செய்து குறிப்பிட்டளவில் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் மறைந்து போகும். திப்பிலி மூலம், சுக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து கடுகு எண்ணையுடன் கலந்து காய்ச்சி தடவினால் இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவையிலிருந்து நிவாரணம் பெறலாம். அத்துடன் திப்பிலி, சுக்கு, மிளகு திப்பிலி வேர், சீரகம், ஏலம், வாய் விடங்கம் மற்றும் கடுக்காய் இவைகளை இளவறுப்பாக வறுத்து நன்கு பொடி செய்துகொண்டு அத்துடன் சர்க்கரை பாகு காய்ச்சி அதில் தேன் கலந்து சிறிய அளவில் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இருமல், இரைப்பு நாவறட்சி மற்றும் தலைச்சுற்றல் போன்றவை அடியோடு நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக