வெள்ளி, 23 மே, 2014

உணவு செரிமானம் அடைவதற்கு!

இன்றைய காலகட்டத்தில் மூளைக்கு மூளை பல உணவகங்கள் உருவாகிவிட்டன. அதுமட்டுமின்றி பல வகையான உணவு வகைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உணவகங்களும், உணவு வகைகளும் அதிகரிக்க அதிகரிக்க நமக்கு பலவகையான உடல் கோளாறுகளும் அதிகரிக்கின்றன.
உடல் கோளாறு வரக்காரணம்
நமது உடல் நம் நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றது  போல பக்குவப்பட்டுள்ளது. நாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து நம் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றது போல உணவு வகைகளை உருவாக்கி பரிணமித்து வந்துள்ளோம்.
எல்லா நாட்டு உணவு வகைகளும் அந்த அந்த நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றார்போல உருவாக்கப்பத்தே. அப்படி இருக்கையில் நாட்டு தட்ப  தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற உணவு. நம் நாட்டு தட்ப வெப்பத்திற்கு எப்படி ஒத்துப்போகும். இப்படியான சூழ்நிலைகளில் தான் நம் உடல் கோளாறில் சென்று முடிகிறது.
இப்படி பன்னாட்டு உணவு வகைகளை மாற்றி மாற்றி உண்பவர்களுக்கு பெரும்பாலும் வரும் பிரச்சினை செரிமானம் ஆகாமை. இப்பொழுது சித்தவைத்தியத்தில் சுலபமாக செரிமானம் ஆகா என்ன வழி என்று பார்ப்போம்.
தேவையான பொருள்
பூண்டு
செய்முறை
உணவு உண்ட பிறகு செரிமானம் ஆகாதது போல உணர்ந்தால் உடனே ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டை சாப்பிட்டால். சுலபமாக செரிமானம் ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக