செவ்வாய், 30 செப்டம்பர், 2014

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்!

உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான்.

ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

ப்ராக்கோலி

ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.

பூண்டு

ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

கேரட்

தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

காளான்

காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

நட்ஸ்

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.
பப்பாளி

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

அவகேடோ

அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.

திராட்சை

திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு அழற்சி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.

தக்காளி

உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரெட் ஒயின்

ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்

எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்.


எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொரு ளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சருமத்துக்குள் ஊடு ருவக்கூடியது. இதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழும். மேலும் சரு மத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்தி, உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட் ராலைக் குறைக்கிறது. ட்ரை ஸ்கின் கொண்டவர்கள் அடிக்கடி தேய்த்து குளிப்பது நல் லது.
பழங்குடியினரால் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் எண்ணை... நீலகிரித் தைலம். காயங்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் சீழ்வடிதலைத் தடுக்கும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் மார்பு சளி, கோழை சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும். தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றை நீக்கும்.
விளக்கெண்ணையை சருமத்தின் மீது பூசினால் உடல் குளிர்ச்சி ஏற்படும். தலைக்கு தடவும்போது கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவ முடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சிïட்டி தூக்கத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது. உடல், கண், மூக்கு, காது, வாய் ஆகியவற்றில் உண்டாகிற எரிச்சலை நீக்கும்.
தேங்காய் எண்ணையை கருஞ்சீரகத்துடன் அரைத்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நோய்கள் தீரும். கேசத்திற்கு ஊட்டமும், வளர்ச்சியும், குளிர்ச்சியும் கொடுக்கிறது. சருமத்தை மென்மையாக்கும். சமையலில் தேங்காய் எண்ணையை சேர்ப்பதால் நமது உட லுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.
உடலுக்கு வனப்பும், ஆரோக்கியமும் அளிக்கக் கூடியது பாதாம் எண்ணை. அனைத்து வைட்டமின் சத்துக்களும், குறிப்பாக தோலுக்கு அழகூட்டும் வைட்டமின் `இ' சத்தும் இதில் அதிகமாக காணப்படுகின்றன. பாதாம் எண்ணையை பெண்கள் தங்கள் உடல் மீது தேய்த்து வர சீக்கிரமே தோலின் பளபளப்பு அதிகரிக்கும்.
ஆலிவ் எண்ணை சருமத்திற்கு வெண்மையும், கேசத்துக்கு போஷாக்கும் அளிக்கிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி முதலான ஊட்டச்சத்துகளும், தாதுப் பொருட்களும் அடங்கியுள்ளன. அதனால்தான் பழங்காலத்தில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆலிவ் கனியை உண்டதுடன், ஊறுகாயாகவும் பயன்படுத்தினர். ஆலிவ் எண்ணையை அதிகமாக சேர்த்துக் கொண்டனர்.

நிறமும், மணமும் அற்ற திரவம் கிளிசரின். சருமத்தின் ஈரப்பதத்தையும், தளர்ச்சியும் கொடுக்கக் கூடியது. கை, கால்களுக்கு மிருதுவான தன்மையை அளிக்கக் கூடியது. காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் கிளிசரின் சினிமா, தொலைக் காட்சிகளில் வரும் அழுகை காட்சிகளுக்கு அதிகமாக பயன்படுத்தப் படுகிறது.

கோக்கோ எனும் தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் வெண்ணை போன்ற கொழுப்புச் சத்துள்ள பொருளே கோக்கோ பட்டர். இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. புரதச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் தாதுப் பொருட்கள் மிகுந்திருப்பதால் சரு மத்திற்கான மாஸ்க் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.

வேப்ப எண்ணை சிறந்த கிருமி நாசினி. தோல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள், தொற்று நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாரம் ஒரு முறை வேப்ப ணீஎண்ணையை அளவோடு தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும். குழந்தைகளுக்கும் வேப்ப எண்ணை மிகவும் நல்லது.

கடுகு எண்ணை சருமத்திற்கு வனப்பை அதிகரிக்கும். அதனால்தான் அழகூட்டும் சோப்புகளில் கடுகு எண்ணை சேர்க்கப்படுகிறது. உணவிலும் சேர்த்துக் கொண்டால் இளமை கூடும். தோல் மற்றும் தோலுக்கு அடுத்துள்ள சதைப் பிடிப்புகளிலும் கடுகு எண்ணை ஒரு நிவாரணியாக பயன்படுகிறது

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

துளசி மல்லி கஷாயம்


துளசி – 2 கைப்பிடி,

சுக்கு – 1 துண்டு,

வெள்ளை மிளகு – 20,

ஏலக்காய் – 5,

தனியா – 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த திராட்சை – 20, பனங்கல்கண்டு

அல்லது பனைவெல்லம் – தேவைக்கேற்ப.

சுக்கு, வெள்ளை மிளகு, தனியாவை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அத்துடன் துளசியும் காய்ந்த திராட்சையும் சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அது பாதியாக சுண்டியதும், வடிகட்டி, பனங்கல்கண்டோ, பனைவெல்லமோ சேர்த்துப் பரிமாறவும்.பொதுவாக தூதுவளைதான் கபம் போக்கும். வெயில் காலத்தில் தூதுவளையின் சூட்டைத் தவிர்க்கவே இங்கே துளசி சேர்த்திருக்கிறோம். உணவின் மூலம் ஏற்படும் மந்தம் நீக்கி, தொற்று வராமல் காக்கும் கஷாயம் இது. மாலை 6 முதல் 9 மணிக்குள் குடிக்கலாம். சளி பிடிக்காமல் தடுக்கும்.

செரிமானப் பிரச்சனைக்கு - மருந்து


செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்துஜீரணம் ஆகாமல் அவதி படுவோர்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து பருகலாம். வீட்டில் இருக்கும் சுண்டைக்காய், பெருங்காயம், பூண்டு, ஓமம், சீரகம் என அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களும் உடல் நலத்தை காப்பதற்கு மிகவும் உதவுகிறது. சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, நீர் மோர் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு சுண்டைக்காய் அளவு பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டு கலக்கி, 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகளை நீக்கும்.ஓமம் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம், பூண்டு 50 கிராம், கறிவேப்பிலை 100 கிராம், தோல் நீக்கிய சுக்கு 200 கிராம் இவற்றை லேசாக நல்லெண்ணையில் வறுத்துப் பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர சொரிமானம் ஆகி வயிற்றுக் கோளாறுகள் இன்றி இருக்கலாம்.விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிட்டால் அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம், உடல் வலி, அசதி முதலியவைகளுக்குவீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் மிகவும் நல்லது. 2 பெரிய துண்டு சுக்கு, 2 ஏலக்காய் இவற்றை நசுக்கிக் கொண்டு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, முக்கால் டம்ளராக வற்றியதும் கருப்பட்டி (பனை வெல்லம்) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலநது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வந்தால் அனைவருக்கும் நல்லது. உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்.மேலும் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால், ஜீரணமாகும். சுக்குப் பொடியுடன் சுடுநீரைச் சேர்த்துக் குடிக்கக்வேண்டும். குடித்து முடித்த பின், சுமார் 15 நிமிடங்கள் இடது பக்கமாக சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள். ஜீரணம் ஆவதில் சிக்கல் இருக்காது. ஒரு கைப்பிடி துவரம்பருப்பு ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், பெரிய துண்டு பெருங்காயம், 2 கைப்பிடி அரிசி, ருசிக்கு உப்பு, பத்து மிளகாய் வற்றல் இவற்றை சிறு தீயில் எண்ணை விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 3 கைப்பிடி பொட்டுக் கடலை சேர்த்துப் பொடி செய்து பாடடிலில் நிரப்பிக் கொள்ளவும். சூடான சாதத்தில் எண்ணை அல்லது நெய் சேர்த்து சாப்பிட அஜீரணம் போகும். பசி எடுக்காமல் அவதி படுவோர்க்கு பசி எடுக்கும்.


மருத்துவக் குறிப்பு



தினசரி பஞ்சகவ்யம் ஒரு கரண்டி சாப்பிட்டு வர புற்றுநோய் அணுகாது. புற்றுநோய் வந்தவர்களும் இதைச் சாப்பிட்டு வந்தால் குணமாகும். பசுவின் பால், தயிர், வெண்ணெய், கோமியம், சாணம் இவற்றைச் சம அளவில் கலந்தால் பஞ்ச கவ்யம் தயார். வெண்ணெய் கைவசம் இல்லாவிடில் பசுநெய் சேர்த்துக் கொள்ளலாம்.
கருணைக்கிழங்கு வாதத்தையும், கபத்தையும் குறைக்கும். மூலம் குணமாகும். வயிற்றுப் பூச்சிகள் சாகும். டி.பி. நோய் தீரும். வாந்தி வராமல் தடுக்கும். பசியைத் தூண்டும்.
இரவில் குழந்தை படுக்கையை நனைத்தால், எள்ளும் சிறிது முள்ளங்கியும் அரைத்து சுண்டைக்காயளவு கொடுத்த வர சிறுநீரின் அளவு குறையும். மூன்று நாள்களுக்கு ஒரு முறை கொடுத்துப் பார்த்து பக்க விளைவு ஏதேனும் ஏற்பட்டால் நிறுத்தி விடுவேண்டும்.
வெந்தயத்தை வறுத்து இடித்துப் பொடி செய்து அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி குறையும்.
வெள்ளை வெங்காயத்தைத் தட்டிச் சாறு பிழிந்து வலிப்பு வந்தவரின் காதில் இரண்டு மூன்று சொட்டுக்கள் விட்டால் வலிப்பு அடங்கி விடும்.
சொத்தைப் பல் ஈறுகளில், வீக்கம், இருந்தால் ஓமம், கிராம்பு, கற்பூரம் சேர்த்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு சொத்தைப் பல்லில் வைக்கவும். ஈறு வீக்கதத்திற்கு இதே பொடியை வீக்கத்தின் மேல் பூசி 5 நிமிடங்களுக்குப் பிறகு வாய்க் கொப்பளிக்க பல் வலி, ஈறு வீக்கம் எல்லாம் குணமாகும்.
இரவு படுக்கப் போகுமுன் பசும்பாலில் தேனும், மஞ்சள் பொடியும் குங்குமப் பூவும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஒரு வித மினுமினுப்பு தோன்றும்.

பயறு வகை

> குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவருக் கும் பயறு வகைகள்  அவசியம் தேவை. அதே சமயம், அதிகமாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. சைவ உணவு சாப்பிடுபவர்கள், தினமும் ஏதேனும் ஒரு வகை பயறை 50 கிராம் எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பயறுகளைச் சுண்டலாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது!'' என்கிறார் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.
> எச்சரிக்கை: ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்டப் பிரச்னை, சிறுநீரகப் பாதிப்புக் கொண்டவர்கள் சில பயறு வகைகளை குறைவான அளவில் சாப்பிடுவதே நல்லது.
> முளைக்கட்டியப் பயறு வகைகளில் 'யூரிக் ஆசிட்' அதிகம் இருப்பதால், மூட்டு வலி (Gout Disease) வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். முளைக்கட்டியப் பயறை வெந் நீரில் மிதமாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இதில், நார்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
> பச்சைப் பயறு
> எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
> கொண்டைக்கடலை
> ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer)  போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன. வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
> மொச்சைப் பயறு
> சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; இதில், புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சிலருக்கு மொச்சை சாப்பிட்டால், வாயுப் பிரச்னை ஏற்படும். அவர்கள் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.  
> காராமணி
> உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும். தென் மாவட்ட மக்கள் இதைத் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
>  கொள்ளு
> எலும்புக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்; தசைகள் வலுப் பெறும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில், புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றன. ஆக்ஸாலிக் ஆசிட் இருப்பதால், அதிகம் சாப்பிடக் கூடாது. அவ்வப்போது, கொள்ளு ரசம் வைத்துச் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது. புரதச் சத்து அதிகம் இருப்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
> ராஜ்மா
> தசைகளை நன்றாக இறுகச்செய்வதோடு, மலச் சிக்கலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் உண்டு. மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஓரளவு இருக்கின்றன. சோடியம், பொட்டாஷியம் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. உடலை வருத்தி உடற்பயிற்சி செய்பவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அனைவரும் சாப்பிட ஏற்றது.
> பட்டாணி
> காய்ந்த பட்டாணியில் புரதம், மாவுச் சத்து, கலோரி மற்றும் தாது உப்புக்களான இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து ஓரளவு இருக்கிறது. பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். பச்சைப் பட்டாணித் தோலில் கால்சியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளன. புரதம், மாவுச் சத்து, கலோரி, வைட்டமின் - சி ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்களும், ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிடலாம். குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது.
> சோயா
> கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப் போக்கும்; வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; இதில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மாவுச் சத்து, தைமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பால் குடிக்காதவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். சோயா சிலருக்கு ஜீரணப் பிரச்னையை ஏற்படுத்துவதால், நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. நாள் ஒன்றுக்கு 20 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
> துவரைப் பயறு
> உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும், மலச் சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கக்கூடியது. இதில், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து, கால்சியம் பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் - சி, நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், மாவுச் சத்து, கலோரி, இரும்பு, கோலின், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. அதிகம் வேக வைக்கவேண்டியது இல்லை. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

வாய் துர்நாற்றம்.

எவ்வளவு தான் விலை உயர்ந்த உடை அணிந்திருந்தாலும் நாம் பேசும் போது வாய் துர்நாற்றம் வீசுமெனில், அது மற்றவரை முகம் சுளிக்க வைக்கும்.

பெருஞ்சீரகம்

வழக்கமாகவே நாம் உணவு உண்ட பின் அஜீரணத்தை விரட்டும் பொருட்டு, நாம் பெருஞ்சீரகத...்தை மெல்லுகிறோம். ஆனால் அவை சிறந்த வாய் புத்துணர்வூட்டிகள் என்பது நாம் அறியாத ஒன்று. அவை நமது உமிழ்நீர் சுரப்பதை அதிகரிக்கும்.மேலும் துர் சுவாசத்தை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போரிடும். ஏப்பம் வருவது மற்றும் ரீஃப்லெக்ஸ் அமிலம் உருவாவதை குறைக்கிறது. நமது சுவாசத்திற்கு இயற்கையாகவே இனிமையூட்ட சில பெருஞ்சீரகத்தை மென்று துர்நாற்றத்தை விரட்டலாம்.

புதினா

சந்தையில் கிடைக்கின்ற பெரும்பாலான, சுவாச புத்துணர்வூட்டிகள், புதினாவை முக்கிய மூலப்பொருள் ஆக கொண்டுள்ளன. உணவை அலங்கரிப்பதில் புதினா முக்கிய பங்கு வகிக்கிறது. தனது வலிமையான குளிர்ச்சியூட்டக்கூடிய பண்பினால் நமது சுவாசத்திற்கு உடனடியான புத்துணர்வை வழங்குகிறது. நாம் சில பச்சையான இலைகளை மெல்லுவதன் மூலமும் அல்லது புதினா டீ அருந்துவதன் மூலமும் துர்நாற்றத்தை விரட்டலாம்.

பார்ஸ்லி

நமது உணவை அலங்கரிக்க பயன்படும் பார்ஸ்லி உபயோகமற்றது என்றே நாம் எண்ணுகிறோம். கிருமிகளுடன் போரிடும் பண்பினையுடைய குளோரோஃபில் பார்ஸ்லியில் நிறைந்துள்ளது. நாம் உணவு உண்டு முடித்த பின் நாம் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிக சிறந்த சுவாச புத்துணர்வூட்டி. அதனால் தான் சோப்புகள், வாசனை திரவியங்கள் மற்றும் சுவாச புத்துணர்வூட்டிகளில் இதன் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

கிராம்பு

நம் உணவிற்கு மணத்தையும் சுவையையும் கூட்ட நாம் கிராம்பினை பயன்படுத்துகிறோம். இது பல்வலியை குறைக்க பயன்படுகிறது. மேலும் பற்பசை மற்றும் மௌத் வாஷ்களில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிறந்த துர்நாற்றத்தை அகற்றும் பொருள் .கிராம்பில் பாக்டீரியா எதிர்ப்பு யூஜினால் நிறைந்துள்ளது. இவற்றை மெல்லுவதன் மூலம் சுவாசத்திற்கு புத்துணர்வூட்டலாம்.

பட்டை

பட்டை பாக்டீரியா எதிர்ப்புக் குணம் நிறைந்துள்ள நறுமண பொருட்களில் ஒன்று. மேலும் இது கெட்ட சுவாசத்தை குறைக்கிறது. நாம் சில பட்டைகளை மெல்லுவதன் மூலமோ அல்லது தேனீரில் சேர்த்து அருந்துவதன் மூலமோ வாய் துர்நாற்றத்தை குறைக்கலாம் அல்லது சில பட்டைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர விட்டு மவுத் வாஷாக பயன்படுத்தலாம்.

ஏலக்காய்

ஏலக்காய் விதைகளின் நறுமணத்துடன் கூடிய இனிய சுவை நமது சுவாசத்திற்கும் இனிமையூட்டுகிறது. ஒரு ஏலக்காயை நமது வாயில் போட்டு மெல்லுவதன் மூலம், துர்நாற்றத்தை விரட்டலாம். ஆகவே நமது உணவினை ஏலக்காய் டீயுடன் முடிப்பது சிறந்தது.

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள் உமிழ்நீர் சுரப்பியை தூண்டி உமிழ்நீர் உற்பத்தியை ஊக்கப்படுத்துகிறது. பல் காரையினால் உருவாகின்ற அமிலங்களை உமிழ்நீர் செயலிழக்க செய்கிறது. இறந்த செல்களை அகற்றுகிறது. மேலும் வாயில் எஞ்சியுள்ள உணவு துகள்களையும் அகற்றுகிறது.

சோம்பு

இவை இனிப்பு உணவு மற்றும் வேக வைத்த உணவு வகைகள் தயாரிப்பதில் பயன்படுத்தும் பொருளாகும். மதுவிற்கு மணமூட்ட இவற்றை பயன்படுத்துகின்றனர். இந்த விதைகளில் நிறைந்துள்ள அனித்தோல், இவற்றிற்கு இனிப்பான மற்றும் நறுமண பண்புகளை வழங்குகிறது. சோம்பு விதைகளின் பாக்டீரியா எதிர்ப்பு குணத்துடன் கூடிய நறுமணம், அவற்றை பயனுள்ள சுவாச புத்துணர்வூட்டி ஆக்குகிறது. நாம் அவற்றை நமது வாயில் போட்டு மெல்லலாம் அல்லது கொதிக்க வைக்கப்பட்ட நீரில் ஊற வைத்து, இயற்கையான சுவாச புத்துணர்வூட்டியாக பயன்படுத்தலாம்.

கொத்தமல்லி அல்லது தனியா

வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவு பொருட்கள் நமது வாயில் துர்நாற்றாத்தினை ஏற்படுத்தலாம். ஆனால் கொத்தமல்லியின் மனம் அந்த துர்நாற்றத்தை மறைக்க உதவும். வாய் துர்நாற்றாத்தினை தவிர்க்க உணவிற்கு பின் சில கொத்தமல்லி இலைகளை மெல்லலாம். மேலும் வறுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகளுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வாய் புத்துணர்வூட்டியாக பயன்படுத்தலாம்.

 

 

புற்றுநோயை தடுக்கும் உணவுகள்






இறப்பை ஏற்படுத்தும் நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நோய்க்கு நிறைய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நிறைய மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறப்பிற்கு ஆளாகின்றனர்
.
ஆனால் உண்மையில் இந்த நோயை உணவுகளாலேயே குணப்படுத்திவிட முடியும். குறிப்பாக ஆரோக்கிய உணவுகளான பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களால் சரிசெய்துவிடலாம்
.


சிவப்பு மற்றும் நீல நிற பழங்கள்


அந்தோசியனின்கள் என்பவை வயதான தோற்றம், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஒரு பொருள்
.
இத்தகைய பொருள் சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் அதிகம் இருக்கும். எனவே அத்தகைய பழங்களான ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி பழங்களை அதிகம் சாப்பிடுவது நல்லது
.


தக்காளி


தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அவை புற்றுநோயால் செல்லுலார் பாதிப்படைவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி இதில் புற்றுநோயை தடுக்கும் முக்கிய பொருளான லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது
.


மஞ்சள்


மஞ்சளில் சிறந்த மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. அதிலும் இது குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்
.


சிட்ரஸ் பழ ஜூஸ்


ஜூஸ் என்றதும் பாக்கெட் அல்லது இதர குளிர்பானங்களை நினைக்க வேண்டாம். சிட்ரஸ் பழங்களால் செய்யப்பட்ட ஜூஸில் தான் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவை புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்
.


காய்கறிகள்



காய்கறிகளில் காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றில் இன்டோல்-3-கார்பினோல் அதிகம் இருப்பதால், அவை மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்துவிடும்
.


பசலைக் கீரை


பசலைக் கீரையில் கரோட்டினாய்டு அதிகம் இருப்பதால் அது முழு உடலுக்கும் நன்மையை தரும். அதேசமயம் இந்த கீரையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணமும் நிறைந்துள்ளது
.


பூண்டு


பூண்டு புற்றுநோய் உடலை தாக்காமல் தடுக்க உதவும் ஒரு சிறந்த உணவுப் பொருள். எப்படியெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், டியூமஙர் செல்களை அழிப்பதோடு, புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலை பாதுகாக்கவும் சிறந்தது
.


காளான்


காளானில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, புற்றுநோயை வராமல் தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், புற்றுநோயை தடுக்கலாம்.

 

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...

 

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும். ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

 

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

 


--
R.Madhavan
9790791445







--
R.Madhavan
9790791445