செவ்வாய், 15 ஜூலை, 2014

முழங்கை கறுப்பு நிறமாக உள்ளதா ?

சிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் முழங்கை கறுப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் அந்த இடத்திற்கு முறையான பராமரிப்பு தருவதில்லை. இத்தகைய கறுப்பை நீக்க சில வழிகள் இருக்கிறது. அவை……
• ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் மூன்று கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டு பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரால் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால், அங்கு இருக்கும் கறுப்பு நீங்கிவிடும்.
• 100 கிராம் காய்ந்த துளசி இலையை பொடி செய்து, அத்துடன் 1 ஸ்பூன் வேப்ப எண்ணெய், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரைத்த புதினா இலை சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
• தினமும் கடுகு எண்ணெய் வைத்து 15 நிமிடம் முழங்கையில் மசாஜ் செய்த பிறகு கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அந்த இடத்தில் உள்ள அழுக்கானது படிப்படியாக போய்விடும்.
• தேங்காய் எண்ணெயுடன் சிறிது தேனை விட்டு, எலுமிச்சை தோல் வைத்து முழங்கையில் 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் காட்டனால் துடைத்து எடுக்கவும். இதனால் அந்த இடத்தில் இருக்கும் அழுக்கானது நீங்கிவிடும்.
மேலும் மேற்கூறிய அனைத்தையும் முழுங்கைக்கு மட்டும் பயன்படுத்தாமல், கழுத்து, கணுக்கால் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம்.

மூலிகை - முசுமுசுக்கை


நுரையீரல் ,சுவாசக்குழல் புண் குணமாகும். கபத்தை நீக்கும்.ஆஸ்துமா, மூச்சு வாங்குதல், கண் எரிச்சல், இளநாரை மாறும். வழுக்கையை தடுக்கும். உடல் பலம் பெரும். மனம் அமைதி, கோபம் தனியும். உயர் ரத்த அழுத்தம் குணமாக்கும். இருமல், சாளி, இழுப்பு வலிகள், உடல் சூடு, ரத்த சுவாச நோய் குணமடையும்.இந்த இலைகளைதோசைமாவில் அரைத்து உண்டால் சுவையாக இருக்கும்.

வாய் புண் மற்றும் வயிற்று புண்ணுக்கு

1. தேங்காயை மென்று அந்த ஜூஸை வாயில் சிறிது நேரம் வைத்திருந்து முழுங்க வேண்டும்.
2.தேங்காய் பால் ரசம் வைத்து சாப்பிடவும்.
3. கீரை சார் செய்து அதில் சிறிது நெய் விட்டு சூடான சாத்தில் பிசந்து சாப்பிடவேண்டும்.
4.தேங்காய்  பால் வெள்ளை கஞ்சி சாப்பிடலாம்.
5.மண்பத்தையை மிளகு உப்பு போட்டு கம்பியில் குத்தி சுட்டு சாப்பிடலாம்.
6.ஜவ்வரிசியை ஊறவைத்து குக்கரில் வேகவைத்து தனமும் பாலி கலந்து சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
7. இளநீரில் வெந்தயம் ஊரவைத்து காலையில் வெரும் வயற்றில் குடிக்கலாம்.இளநீர் தேங்காயை வழிக்கும் போது அதன் உள்ளே இருக்கும் கசப்பு தோலுடன் சாப்பிடனும்.
8.கசகசாவை மையாக அரைத்து பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
9.தேன் கூட புண்ணு உள்ள இடத்தில் வைக்கலாம்.
10.மாதுளை பழம் அந்த கசப்பு தோலுடன் சாப்பிடனும்.
11. நல்லெண்ணையை வாயில் ஊற்றி கொப்பளிக்காலாம்