திங்கள், 20 ஏப்ரல், 2015

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குளிர்பானங்கள்

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், உடலில் நோய்கள் விரைவில் தாக்கும்.
ஆதலால் நோயெதிர்ப்பு மண்டத்தை வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வதோடு குளிர்பானங்களையும் குடிக்க வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ்
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சை ஜூஸ் உதவியாக இருக்கும்.
ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி வளமையாக உள்ளது. இது உடலின் அமிலத்தன்மையை நிலையாக வைத்திருக்க உதவும்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, சல்பர், கால்சியம், இரும்புச்சத்து, கரோட்டீனாய்டு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது.
இதனை அன்றாடம் குடித்து வந்தால் நோய்களின் தாக்கம் குறைவதோடு, முளையின் இயக்கமும் சீராக இருக்கும்.
மேலும் பீட்ரூட் ஜூஸ் கல்லீரரல் மற்றும் சிறுநீர்ப்பையை சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.

கேரட் ஜூஸ்
கேரட் கண்களுக்கு மட்டும் நல்லதல்ல. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
அதற்கு கேரட்டை அன்றாடம் பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்தோ குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மட்டுமின்றி, கல்லீரலும் சீராகவும் இயங்கும்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

தும்பைப் பூ

 



தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும்.

தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தீராத தலைவலி மற்றும் ஜலதோஷம் போக்கும் தன்மை இந்த தும்பைப் பூக்களுக்கு உண்டு.

தலைவலி போக்கும் சாறு

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைப்பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும்.

சகலவிதமான காய்ச்சலுக்கும் தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு டீஸ்பூன் தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர காய்ச்சல் குணமடையும்.

சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்.

வாதம் குணமடையும்

கால் டீஸ் பூன் அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் ஜுரம், வாதஜுரம் குணமடையும்.

பாம்பு கடி குணமடையும்

பாம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு உடனடியாக தும்பைப்பூவின் சாறை மூக்கில் பிழிந்து விட்டால் மயக்கம் தெளியும். அதன்பின் கடிக்கு வைத்தியம் பார்க்கலாம்.

புதன், 8 ஏப்ரல், 2015

கசகசா மருத்துவம் -

 கசகசா மருத்துவம் க்கான பட முடிவு





கசகசா, வால்மிளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு பொடித்து தேன் விட்டு 5 கிராம் பாலுடன் காலை, மாலை சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.
கசகசாவை எருமை தயிரில் அரைத்து இரவு படுக்கப்போகுமுன் தினசரி தடவி வந்தால் முக சுருக்கங்கள் நீங்கி முகம் பளபளப்புடன் ஜொலிக்கும்.
தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.

 
ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தோப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும். 10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
சகசாவை ஊற வைத்து அரைத்து தினதோறும் உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் மறையும்.

குடற்புண்ணை ஆற்றும், உடலிற்கு வலிவு தரும். இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம். தூக்கமின்மை. வயிற்றில் கிருமி, தினவு, சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் இவற்றில் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம். இகசகசா, வால்மிளகு, பாதாம்பருப்பு, கற்கண்டு வற்றைச் சம அளவு சேர்த்து இடித்துத் தேன் நெய் போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடல் மழமழப்பும், வலிவும் பெறும். ஆண்மையை வளர்க்கும். பெண்கள் மாதவிடாய் காலத்திற்குமுன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி குறையும்.
மூன்று முதல் ஐந்து பாதாம்பருப்பு மற்றும் அரை ஸ்பூன் கசகசாவையும் பசுவின் பாலில் அரைத்துக் காய்ச்சிச் சாப்பிடப் பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் பெருகும். பொதுவாக உடல் வலிவடையவும், பருக்கவும், சூடு தணியவும் ஏற்ற பானம். பருவத்திற்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் புஷ்டி வலிவு பெறவும் ஏற்ற காலை உணவு இது.
கசகசாவை முதல் நாளிரவு ஊரவைத்துக் காலையில் அரைத்துத் தேங்காய்ப்பால், மோர், தயிர் வடித்த கஞ்சி  காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். பொலிவு, மழமழப்பு அதிகமாகும். இத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து உபயோகிக்கலாம்.
பாவப்ரகாசர் எனும் முனிவர் கசகசாவைப் பற்றிய வர்ணனையில் போஸ்தக்காயின் மேலோட்டுப் பகுதியை காயவைத்து நன்றாகப்பொடித்துத் தேன் குழைத்து சாப்பிட்டால் பேதியை நிற்குமென்றும், மார்பில் சளி சேர்ந்து ஏற்படும் இருமலை குணப்படுத்திவிடுமென்றும் குறிப்பிடுகிறார். மேலும் கசகசாவை ஒரு சிறிய அளவில் உணவுடன் சேர்த்து வருபவர்களுக்குவாக்விவர்த்தனம்அதாவது சொல்வன்மை கூடுமென்றும் எடுத்துரைத்திருக்கிறார்

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

நிலாவரை ( கொலஸ்ட்ராலை கரைக்கும் )


udal paruman2-10

 
 

உடலில் இருக்கக்கூடி கொலஸ்ட்ராலை முழுமையாக கரைக்கும், உடல்பருமனை குறைக்கக்கூடிய தன்மை உண்டு. உடல்பருமன் என்பது ஒரு நாளிலேயோ, ஒருவாரத்திலேயோ, ஒரு மாதத்திலேயோ உண்டாவது கிடையாது. சிறிதுசிறிதாக ஏறக்கூடிய உடல்எடையை சிறிதுசிறிதாகத்தான் குறைக்கமுடியும். 90 கிலோ நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் முதல் ஆறுமாத காலத்திற்கு இந்த 90 கிலோவை தக்கவைக்க வேண்டும். 90 கிலோவை தக்கவைத்தப்பிறகு அதன்பிறகு சிறிதுசிறிதாக குறைக்கக்கூடிய வேலைகளில் ஈடுபடவேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ குறைத்தால் கூட பத்து மாதத்திற்கு பத்து கிலோ குறைக்கலாம். சிறிதுசிறிதாக குறைத்து வரக்கூடியதுதான் உடல் எடையை குறைக்குமே ஒழிய, சடாரென்று குறையும் எடை வேகமாக ஏறக்கூடிய வாய்ப்பு உண்டு. ஏனென்றால் நம் உடம்பில் 67 சதவிகிதம் நீராலானது, சில மருந்துகளை கொடுக்கும் பொழுது அதாவது பேதி மருந்துகளைக் கொடுக்கும் பொழுது, கொழுப்பைக்குறைக்கக்கூடிய மருந்துகளைக் கொடுக்கும் பொழுது சடாரென்று 4 கிலோ, 5 கிலோ குறையும், மறுபடியும் 10 கிலோ ஏற ஆரம்பித்துவிடும்.

எனவே அந்த மாதிரியெல்லாம் குறைக்காமல் பசியோடு இருந்து பழகுங்கள் அதாவது உணவு என்பது பசிக்கு மருந்தாக இருக்க வேண்டும், அந்தப் பசி இருக்கும் பொழுதே அரை வயிறாக சாப்பிடுவது, ஓரளவு சாப்பிடுவது, வயிறு முட்ட சாப்பிடாமல் இருப்பது இவற்றையெல்லாம் நாம் பழக்கப்படுத்தும்பொழுது உடல்பருமனிலிருந்து முழுமையாக மீளக்கூடிய சூழல் உண்டாகும். எந்த அளவிற்கு இன்றைக்கு இருக்கக்கூடிய பட்டை தீட்டிய அரிசியைக் குறைத்துவிட்டு, நார்ச்சத்துள்ள சிறுதானியங்களான வரகு, திணை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி இவற்றையெல்லாம் பிரதான உணவாக மாற்றும் பொழுதும், கூடவே மக்காச்சோளம் போன்ற உணவை அதிகமாக எடுத்துக்கொள்வதனால் கண்டிப்பாக உடல்பருமனிலிருந்து விடுபடமுடியும். மிக எளிமையான விசயம் ஆனால் பழக்கப்படுத்துவதில்தான் எடைகுறைவதும், ஏறுவதும் இருக்கிறது. ஆக நான் சொன்னதைத் தொடர்ந்து செய்து வாருங்கள், உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள், சித்தர்கள் கூறிய மருந்துபொருட்களையும் விடாமல் முறையோடு தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வாருங்கள். உடல்பருமன் என்பதை குறைப்பது சாத்தியமே.