திங்கள், 28 ஆகஸ்ட், 2017

விளக்கெண்ணெய் மருத்துவம்

விளக்கெண்ணெய்  5 முதல் 10மி.லி வரை குடிப்பதால் வயிறு கழியச் செய்து சுத்தமாகும்.
1. ஆமணக்கு எண்ணெயை பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தைத் துரிதப்படுத்த 120மி.லி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கலாம்.
2. ஆமணக்கு எண்ணெயை மேற்பூச்சாக பூசிவிடுவதால் மூட்டுவலிகள், தசைபிடிப்பு மற்றும் தசை வலிகள் மற்றும் முதுகு வலிகள் அத்தனையும் அகன்று போகும்.
3. மாதவிலக்கு காலத்தின் போது மாதர்கள் அடிவயிற்றுவலி மற்றும் இடுப்பு வலி என்று அவதிப்படும் போது விளக்கெண்ணெயை அடிவயிற்றின் மேல் பூசி வைக்க வலி விரைவில் தணிந்து போகும்.
4. நெறி கட்டிகள் ஏற்பட்டு வீக்கமும் மற்றும் வலியும் ஏற்பட்டால் விளக்கெண்ணெயை மேற்பூசி வைக்க ரத்த ஓட்டம் சீர்பட்டு வீக்கமும் வலியும் குறை யும்.
5. படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வருவதோடு கண்களைச் சுற்றிய கருவளையங்கள் மாறிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் பார்வைத் தெரிவும் உண்டாகும்.
6. 10மி.லி சிற்றாமணக்கு எண்ணெயோடு 5மி.லி தேன் சேர்த்து நன்றாகக் கலந்து உள்ளுக்கு வெறும் வயிற்றில் கொடுக்க வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வயிறு சுத்தமாகும். பசியின்மை மற்றும் வயிற்று வலி இவை குணமாவதோடு சீதள மிகுதியால் ஏற்பட்ட கோழைக்கட்டு, இரைப்பு மற்றும் இருமல் இவைகள் இல்லாமற் போகும்.
7. ஆமணக்கு இலைகளை சிறு துண்டுகளாக நறுக்கி சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் வலியுண்டாகச் செய்கின்ற கீல்வாயுகளுக்கும் மற்றும் வீக்கங்களுக்கும் ஒத்தடம் தர வீக்கமும் வலியும் தணிந்து போகும்.
8. ஆமணக்கு இலைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு குடிக்கச் செய்து ஆமணக்கு இலைத் தீநீர் செய்து ஒற்றடம் தருவதாலோ அல்லது இலையை வதக்கி மார்பகங்களின் மேல் கட்டி வருவதாலோ பிள்ளை பெற்ற பெண்மணிகளுக்கு பால் நன்றாக சுரக்கும்.
10. சிற்றாமணக்கு இலையோடு சம அளவு கீழ்க்காய் நெல்லி சேர்த்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு சில நாட்கள் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும். இப்படிப் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஆமணக்கு நமக்கு சாலை ஓரங்களில் மண்டிக் கிடக்கும் தாவரமாகும். எண்ணெயும் எளிதில் கடைகளில் கிடைக்க கூடியதாகும். இதன் அருமை தெரிந்து மனதில் பதிந்து பயன் பெற வேண்டும்.
11. ஆமணக்கு எண்ணெயை ஒரு துணியில் நனைத்து மூட்டு வீக்கம் வலி கண்ட இடத்தின் மேற் சுற்றி அதன்மேல் ஒரு பிளாஸ்டிக் காகிதத்தை சுற்றி அதற்கும் மேலாக சுடு தண்ணீர் நிரப்பிய பாட்டிலால் ஒற்றடமிட மூட்டுவலி மற்றும் வீக்கம் ஆகியன குணமாகும்.

Buy this product here: https://amzn.to/3k96NoS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக