தேவையான பொருட்கள்
இஞ்சியை தோல் நீக்கிக் கொள்ளவும். இலைகளை நீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக இடிக்கவும். இத்துடன் ஒன்றரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்து பாதியாக குறைந்ததும் எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும். இத்துடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
மித்ராவின் குறிப்பு -
வெது வெதுப்பாக குடிக்கலாம். இது சளி, இருமல், பசியின்மை போன்றவைக்கு நல்ல மருந்து. காலை, மாலை கால் கப் குடிக்கலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். துளசி மற்றும் ஓம இலை சேர்த்தால் சளிக்கு மிகவும் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை.
- இஞ்சி – 1 – 2 இன்ச் துண்டு
- மல்லி விதை – ஒரு தேக்கரண்டி
- மிளகு – அரை தேக்கரண்டி
- சீரகம் – அரை தேக்கரண்டி
- பனங்கற்கண்டு – சுவைக்கு
- துளசி இலை – 10
- ஓம இலை / கற்பூரவள்ளி இலை – 1 – 2
இஞ்சியை தோல் நீக்கிக் கொள்ளவும். இலைகளை நீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக இடிக்கவும். இத்துடன் ஒன்றரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்து பாதியாக குறைந்ததும் எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டி கொள்ளவும். இத்துடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
மித்ராவின் குறிப்பு -
வெது வெதுப்பாக குடிக்கலாம். இது சளி, இருமல், பசியின்மை போன்றவைக்கு நல்ல மருந்து. காலை, மாலை கால் கப் குடிக்கலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 5 மில்லி கொடுக்கலாம். துளசி மற்றும் ஓம இலை சேர்த்தால் சளிக்கு மிகவும் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை.
No comments:
Post a Comment