செவ்வாய், 11 ஜூன், 2013

வயிற்றுப் போக்குக்கு மோர்!

குழந்தைகளுக்கு சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்படின், வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படும். பாலை மறுக்கும், அழுது கொண்டே இருக்கும்.
கிருமியால் விளைந்த வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, குழந்தைகள் படுத்தபடியே ஓய்வெடுக்க வேண்டும். கேரட்டை வேகவைத்து அதனை கூழாக்கி, வயிற்றுப் போக்கு ஆகும் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
குடல் ஆரோக்கியத்திற்கு மோர் மிகவும் முக்கியமானது. மோரில் உள்ள அமிலம் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.
வயிற்றுப் போக்கு ஆகும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம். மோரைக் கொடுப்பதால் சளி பிடிக்கும் என்று பயம் இருந்தால், மோரை நன்கு சூடாக்கிக் கொடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக