சனி, 28 செப்டம்பர், 2013

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை!

காலையில் சிறுநீரை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக் கவனியுங்கள்.

1. எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.

2. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்.

3. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய்.

4. எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.

5. எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது.

6. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்துவது கடினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக