வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

பன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருந்துகள்

காய்ச்சல் அறிகுறி தென்பட்டதும், உடனடி சிகிச்சையாக கீழே குறிப்பிட்ட மருந்தைத் தயாரித்து உட்கொள்ள வேண்டும். வெற்றிலை - 2 கற்பூரவல்லி - 2 துளசி இலை -2 நல்ல மிளகு - 5 இவற்றை இடித்து நீரில் கொதிக்கவைத்து, சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

பின்னர் காய்ச்சல் குணமாகும் வரை சுக்கு - 3 கிராம் மிளகு - 3 கிராம் திப்பிலி - 3 கிராம் சித்தரத்தை - 3 கிராம் குறுந்தட்டி - 3 கிராம் நறுக்குமூலம் - 3 கிராம் அதிமதுரம் - 3 கிராம் சடமாஞ்சி - 3கிராம் இவை ஒரு வேளைக்கான அளவு இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர, காய்ச்சல் முழுமையாக குணமடையும்.

அல்லது சுக்கு - 1 துண்டு மல்லி விதை - 10 கிராம் சீரகம் - 5 கிராம் சோம்பு - 5 கிராம் இவைகளை நன்றாக இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் காணாமல் போய்விடும். குடிநீரில் சீரகம், ராமிச்சம் வேர் (வெட்டிவேரில் ஒரு வகை) துளசி, மிளகு (லிட்டருக்கு 2 அல்லது 3 மட்டும்) போட்டு கொதிக்க வைத்து ஆறியபின் வடிகட்டி பயன்படுத்தி வந்தால் இந்த நோய் எளிதில் தொற்றாது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக