புதன், 21 ஆகஸ்ட், 2013

முலிகை - கண்டங்கத்திரி



கண்டங்கத்திரி ஒரு மருந்துவகை தாவரம். இந்த தாவரம் முழுவதும் முட்களாக காணப்படும். மலர்கள் கொத்தாக இருக்கும். கனிகள் கோள வடிவத்துல இருக்கும். விதைகள் தட்டையானவை. இலைகளோட சாற்றை மிளகுடன் சேர்த்து மூட்டு வலி நீங்குவதற்கு தேவையான மருந்து தயாரிக்கப்படுது.
இதோட வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. இருமல், காய்ச்சலைப் போக்கும். கனிகளோட சாறு தொண்டை வலியைக் குணமாக்குது. குழந்தைகளோட இருமலுக்கு கனிகளைக் காய வைத்து, பொடியாக்கி, தேனுடன் கலந்து கொடுக்கலாம்.
விதைகளை எரித்து அதில் இருந்து வரும் புகையை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களை நுகரச் செய்யலாம். அப்போது உடலில் உள்ள சளி நீங்கும். செரிமானத்தை அதிகரிக்குது. மலச்சிக்கலைத் தீர்க்கும் மருந்தாக பயன்படுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக