செவ்வாய், 10 அக்டோபர், 2017

டெங்கு காய்ச்சல் (Dengue Fever )




Image result for dengue mosquito images
தண்ணீர் தேங்க விடாதீர்கள்!
                முன்பெல்லாம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெருகிய ஏடியஸ் கொசுக்கள் இப்போது கோடை மழைக் காலச் சூழலிலும் பெருகி வருகின்றன.
                ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம். ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
நோய் தொற்றிய பின் காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது?
                நோய்க்கிருமி தொற்றியதும் அவை நிணநீர் நாளங்களில் பெருக்கம் அடையும். 4 முதல் 6 நாட்களில் அறிகுறிகளை உண்டாக்கும்.
டெங்கு காய்ச்சல்... அறிகுறிகள் என்ன?
1.             டெங்கு காய்ச்சல் ( Dengue Fever -DF)
2.             டெங்கு ரத்தக் கசிவு காய்ச்சல் (Dengue Hemorrhagic Fever -DHF)
3.             டெங்கு தீவிர தாக்குதல் நிலை (Dengue Shock Syndrome)
                இவ்வாறு டெங்கு சுரத்தில் 3 நிலைகள் ஏற்பட்டு மரணங்களும் ஏற்படுகின்றன.
  1. DF: கடுமையான ள1030 - 1050 ஊன சுரம், கடும் தலைவலி, கண்களுக்கு பின்னால்
கடும் வலி (Retro Orbital Pain), தசைவலி, எலும்பு & மூட்டுவலி, கடும் வாந்தி, தோலில் சிவந்த சினைப்புகள் (Rash)
  1. DHF: கடும் சுரம், தோலில் சிவப்பு, ஊதா நிறப் புள்ளிகள், வாய் உட்பகுதி,
   மூக்கு, குடற்பகுதியில ரத்தக் கசிவு, ரத்த வாந்தி, ரத்த மலம்.
 (3)          DSS: நோய் உக்கிரமடைந்து ரத்த சுழற்சி செயலிழந்து விடும். இந்நிலை ஏற்பட்டு
   12 – 24 மணி நேரங்களில் நோயாளி மரணமடைந்து விடுவார்.
 டெங்கு சுரத்தை உறுதிப்படுத்த சோதனைகள் உள்ளதா?
                நேரிடையாக (அ) மறைமுகமாக டெங்கு சுரத்தை ஆய்வுக் கூடங்களில் உறுதிப்படுத்த முடியும்.
                நோயின் ஒரு கட்டத்தில் டெங்கு வைரஸ்கள் மனித ரத்தத்திலுள்ள தட்டையணுக்களை (PLATELETS) அழிக்கும். எனவே வாய், மூக்கு என உடலின் பல பாகங்களில் ரத்தக் கசிவு நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படும். இந்நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் - மருத்துவமனைகளில் (Fresh Blood Transfusion (அ) Platelets Rich Plasma) ரத்தம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
டெங்கு சுரத்திற்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா?
  • ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை!
  • சித்த, ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன.
  • நிலவேம்பு கசாயம் தினம் - காலை / மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸôல் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.
  • ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும்.
  • சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.
  • ரத்தத் தட்டணுக்கள் ( PLATELETS) குறையாமல் காக்கவும், அதனை வேகமாக அதிகரிக்கச் செய்யவும் ஆடாதோடை மூலிகை (ஆரம்ப நிலை தட்டணு குறைவு உள்ளபோது - 1 லட்சம் To 11/2 லட்சம்        அளவுக்குள் இருக்கும்போது) சாற்றினை சற்று சூடாக்கி தினம் 10 மி.லி. வீதம் 1 வாரம் சாப்பிட்டால் Platelets அதிகரிப்பதைக் கண்கூடாக காணலாம். (ஆடாதோடை பச்சை இலை கிடைக்காவிட்டால்.... பொடியாக, மாத்திரையாக கிடைத்தாலும் பயன் படுத்தலாம்)
                (குறிப்பு : Platelets எண்ணிக்கை மிகவும் குறைந்தால் ரத்தம் செலுத்துவது மிகவும் அவசியம்; நல்லது.)

பாதுகாப்பு முறைகள் :
  • பாதிப்பு அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லாதீர்கள்.
  • \காலி பக்கெட்டுகள், தண்ணீர் பாத்திரங்களை கவிழ்த்து வையுங்கள், அதிக தண்ணீரை சேகரிக்காதீர்கள். தண்ணீர் உள்ள பாத்திரங்களை நன்கு மூடி வையுங்கள்.
  • தொட்டி செடிகளை சுத்தமாக வைத்திருங்கள். நீர் தேங்கச் செய்யாதீர்கள்.
  • பகலோ, இரவோ கொசு தவிர்ப்பு கிரீம், உடல் மூடிய ஆடை போன்ற பாதுகாப்பு முறைகளை பின்பற்றுங்கள்.
  • ஜன்னலுக்கு கொசு வலை கண்டிப்பாய் அடியுங்கள். கதவுகளுக்கு கீழே இடைவெளி இல்லாது அடையுங்கள்.
  • கொசு வலை அவசியம்.
  • குப்பை தொட்டிகளை உடனுக்குடன் சுத்தம் செய்யுங்கள்.
  • கற்பூரம் ஏற்றும் அறையில் கொசு வராது.
  • வேப்பிலை இலை கொண்டு சாம்பிராணி போல் புகை போடுங்கள்.
  •  காய்ந்த வேப்பிலை பொடி கொண்டு உடலில் தேய்த்துக் குளியுங்கள்.
கை சிகிச்சை முறையாக :
  • பப்பாளி இலை சாறு கொஞ்சமாக இருமுறை கொடுக்கின்றனர்.
  • பூண்டு, இஞ்சி சேர்க்கின்றனர்
  • மஞ்சள் பொடி சேர்த்த பால் கொடுக்கின்றனர். ஆனால் மருத்துவ உதவி மிக அவசியம்.
  • டெங்கு ஜுரம் – வைரஸ் பாதிப்பு.
  • டைபாய்ட், மஞ்சள் காமாலை போல் இதனை குணப்படுத்த முடியாது. ஆனால் சிகிச்சை கண்டிப்பாய் உதவும்.
  • கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை தேவைப்படுகின்றது.
  • ரத்த பரிசோதனை மற்றும் பாதிப்பின் தீவிரத்திற்கு ஏற்ப மேலும் பரிசோதனைகள் தேவைப்படும்.
  • சில நாட்கள் முதல் சில வாரங்களில் குணமாகும்.
  • ஒரு முறை பாதிக்கப்பட்டவர்கள், இரண்டாவது முறையும் பாதிக்கப்பட்டால் நோயின் தீவிரம் கூடுகின்றது.
  • அதிக ஜுரம், தலைவலி, சருமத்தில் பாதிப்பு, சதை வலி, மூட்டு வலி என இந்த ஜுரம் பாதிக்கப்பட்டவரை வெகுவாய் படுத்தும்.
  • மிக அதிக பாதிப்பு இருக்கும் போது ரத்த கசிவு, ஷாக் போன்றவை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகலாம்.
  • வலி நிவாரணம், ஜுரம் மட்டுப்படுத்துதல், தேவையான அளவு நீர் சத்து போன்றவை மிக அவசியம்.
தொடர்ந்து ஜுரம் கூடும்போது மருத்துவமனை சிகிச்சை அவசியம்.
பாதிக்கப்பட்டவர் :
  • வயிற்று வலி, முதுகு வலி, கண் வலி, எலும்பு, மூட்டுகளில் வலி, சதை வலி, தலை வலி, தொண்டை வலி.
  • உடல் சில்லிடுதல், சோர்வு, ஜுரம், பசியின்மை.
  • வயிற்று பிரட்டல், வாந்தி சில சமயம் ரத்த கசிவு.
  • சருமத்தில் சிகப்பு புள்ளிகள் என்ற அறிகுறிகளை கூறுவர்.
  • அத்தகைய நேரங்களில் உஷாராகி சிகிச்சையை தொடங்கி விடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக