ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

எண்ணெய் தேய்த்து குளிப்பதின் அர்த்தம் தெரியுமா???

ஞாயிறு : சூரியன் உச்சம் பெற்ற நாள். பலன் கொடுப்பவனும் அவனே. சூரியன் நாளான ஞாயிறு சுறுசுறுப்பு உற்சாகம் உடைய நாள். சுறுசுறுப்பான இதயம் எண்ணை முழுக்கால் மந்தகதிபடும். அது தீங்கு.சனிக்கிழமை தோறும் எண்ணை தேய்த்துக் குளித்தால் வைத்திய செலவு அதிகம் வராது. மயானத்திற்குச் சென்று வந்தவனும், தலைமுடி வெட்டிக் கொண்டவனும் தலையில் எண்ணையை வைத்துக் கொண்டு ஒருபோதும் குளிக்கக்கூடாது. ஆண்கள் : புதன், சனிக்கிழமையிலும், பெண்கள் : செவ்வாய், வெள்ளிக்கிழமையிலும் குளிக்கலாம். அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, ஜென்ம நட்சத்திரத்தன்று குளிக்கக்கூடாது. தலையில் தேய்த்த எண்ணையை வழித்து உடம்பின் பிற பகுதிகளில் தேய்த்தல் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக